Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மடிக் கணினி வழங்கும் விழா

Print PDF

தினமணி              11.08.2012

மடிக் கணினி வழங்கும் விழா

ராமநாதபுரம், ஆக. 10: ராமநாதபுரம் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் சார்பில் விலையில்லா மடிக் கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை அப்பள்ளி வளாகத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

உதவித் தலைமை ஆசிரியர் பொன்.மாடசாமி, நகர்மன்ற உறுப்பினர் பாக்கியவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் நாச்சியப்பன் அனைவரையும் வரவேற்றார்.

நகர்மன்றத் தலைவர் எஸ்.கே.ஜி.சேகர் அப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவிகள் 133 பேருக்கு மடிக் கணினிகளை வழங்கி பேசியதாவது:

மாணவிகளுக்கு படிக்க கல்வி உதவித்தொகை, விலையில்லா சைக்கிள் ஆகினவற்றையும் வழங்கும் தமிழக அரசு அறிவைப் பெருக்கிக் கொள்ள விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி வருகிறது என்றார்.