Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி

Print PDF

தினமணி 29.09.2010

நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி

மதுரை,செப்.28: நகப்புற ஏழைகள் வீடு கட்ட வீட்டுவசதி வாரியம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதாக, ஆட்சியர் சி. காமராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

நகராட்சி,பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரும் குறைந்த வருமானம் உடையவர்களும், இந்தக் கடன் உதவியை பெறலாம். பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரின் மாத வருமானம் ரூ. 5 ஆயிரம் வரை இருக்க வேண்டும். குறைந்த வருமானப் பிரிவினரின் மாத வருமானம் ரூ. 5001 முதல் 10 ஆயிரம் வரை இருக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ரூ. 1 லட்சம் கடனாக வழங்கப்படும். குறைந்த வருமானப் பிரிவினருக்கு ரூ. 1லட்சத்து 60 ஆயிரம் கடனாக வழங்கப்படும். இந்தக் கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகால இடைவெளியில் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத் தரப்படும்.

கடன் தொகைக்குரிய வட்டித் தொகையில் 5 சதவீத மானியம் வழங்கப்படும்.

கூடுதலாக கடன் தொகை தேவைப்படுபவர்களுக்கு, கூடுதல் தொகைக்கு ஏற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்காகக் கட்டப்படும் வீடுகள் குறைந்தபட்சம் 25 சதுரமீட்டர் பரப்பளவில் இருக்க வேண்டும். குறைந்த வருமானப் பிரிவினர் கட்டும் வீடுகள் 40 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்க வேண்டும்.

சொந்த வீடு இல்லாதோர் மட்டும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். சொந்தமாக நிலம் வைத்திருப்போர் அதற்கான பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்களும், இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

இது தொடர்பான விவரங்களுக்கு, மதுரை எல்லிஸ் நகரிலுள்ள வீட்டுவசதி வாரியச் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை நேரில் அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விவரங்களுக்கு, மதுரை எல்லிஸ் நகரிலுள்ள வீட்டுவசதி வாரியச் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலரை நேரில் அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்