Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி வரிவசூல் வாகனம் நிற்குமிடங்கள்

Print PDF

தினமணி 11.10.2010

மாநகராட்சி வரிவசூல் வாகனம் நிற்குமிடங்கள்

திருச்சி, அக். 10: திருச்சி மாநகராட்சியின் நடமாடும் கணினிமயமாக்கப்பட்ட வரிவசூல் வாகனம், அக். 11 முதல் 15-ம் தேதி வரை நிற்குமிடங்களை மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அக். 11 (திங்கள்கிழமை): காலை 10 முதல் பகல் 12 மணி வரை- (வார்டு 30) விவேகானந்தா நகர், பகல் 12- பிற்பகல் 2 மணி- (வார்டு 31) பொன்னேரிபுரம், பிற்பகல் 2- மாலை 5- (வார்டு 36) அடைக்கலமாதா கோயில் தெரு.

அக். 12 (செவ்வாய்க்கிழமை): காலை 10 முதல் பகல் 12 மணி வரை- (வார்டு 34) என்எம்கே காலனி (டோல்கேட்), பகல் 12- பிற்பகல் 2 மணி- (வார்டு 43) இலுப்பூர் ரோடு கல்லுக்குழி, பிற்பகல் 3- மாலை 4 மணி- (வார்டு 35) ஜேகே நகர், மாலை 4- 6 மணி- (வார்டு 37) வயர்லஸ் ரோடு (திலகவதி மளிகைக் கடை எதிரில்).

அக். 13 (புதன்கிழமை): காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை- (வார்டு 38) சாத்தனூர் பிரதான சாலை (தேவி திரையரங்கம் அருகில்), பிற்பகல் 1- மாலை 5 மணி- (வார்டு 42) சுந்தர்நகர்.

அக். 14 (வியாழக்கிழமை): காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை- (வார்டு 39) பட்டி மெயின்ரோடு (கேஆர்எஸ் நகர்), பிற்பகல் 1- மாலை 5 மணி- பஞ்சப்பூர் மாநகராட்சிப் பள்ளி அருகில்.

அக். 15 (வெள்ளிக்கிழமை): காலை 10 முதல் பகல் 12 மணி வரை- (வார்டு 44) கீழப் பள்ளத்தெரு, காலை 11.30- பிற்பகல் 1 மணி- (வார்டு 46) செடல் மாரியம்மன் கோயில் எதிரில், பிற்பகல் 1- 2.30 மணி- (வார்டு 47) ராஜா காலனி, பிற்பகல் 2.30- மாலை 5 மணி- (வார்டு 48) கான்வென்ட் ரோடு. இந்த வாகனங்களில் அந்தந்த வார்டு மக்களைத் தவிர மற்றவர்களும் வரியினங்களைச் செலுத்தலாம்.