Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசைகளை மேம்படுத்த மாநகராட்சி தீவிரம் :1,050 வீடுகள் கட்டி முடிச்சாச்சு!

Print PDF

தினமலர்                     19.11.2010

குடிசைகளை மேம்படுத்த மாநகராட்சி தீவிரம் :1,050 வீடுகள் கட்டி முடிச்சாச்சு!

திருப்பூர் :திருப்பூர் மாநகராட்சியில் ஒருங் கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்படுத்துதல் மற்றும் புதிய குடியிருப்பு அமைத் தல் திட்டங்களில், இதுவரை 1,050 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது 400 வீடுகளில் கட்டுமான பணி நடந்து வருகிறது.மாநகராட்சிக்கு உட்பட்ட பூலவாரி சுகுமாரன் நகர், காங்கயம் பாளையம் புதூர், அண்ணமார் காலனி, சூசையாபுரம், சின்னா நகர், குமரப்பபுரம், மிஷின் வீதி, சத்யா நகர், செம்மேடு, ராஜிவ் நகர் உள்ளிட்ட 110 இடங்கள், குடிசை குடியிருப்புகளாக அடையாளம் காணப்பட்டன. இப்பகுதிகளில், ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2007-08 முதல், மாநகராட்சி நிதி ஒதுக்கீடு மூலம் வீடுகள் கட்ட மானியம்வழங்கப்படுகிறது.புதிய குடியிருப்பு திட்டத்தின் கீழ், நான்கு தவணைகளாக 18 ஆயிரம் ரூபாய் வீதம் 72 ஆயிரம் ரூபாய் மானியமாக பயனாளிகளுக்கு மாநகராட்சி சார்பில் வழங் கப்படுகிறது. தரைமட்டம் எழுப் பியதும் ஒரு தவணை, கூரை மட்டம் வரை கட்டுமான பணி முடிந்த நிலையில் ஒரு தவணை, மேற்கூரை அமைத்த நிலையில் ஒரு தவணை, வீடு முழுமையான பின் ஒரு தவணை என நான்கு முறையும் தலா 18 ஆயிரம் ரூபாய் என 72 ஆயிரம் ரூபாய் வழங் கப்படுகிறது.இதுதவிர, குடிசை குடியிருப்புகளில் வீடுகள் பராமரிப்புக்காக 36 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கி, வீட்டு கூரை புதுப் பித்தல், தளம் அமைத்தல், காம்பவுண்ட் சுவர் எழுப்புதல் மற்றும் கழிப்பிடம் கட்டி, வீடுகள் புதுப்பிக்கப்படுகின்றன.

கடந்த நான்கு ஆண்டுகளில், காங்கயம்பாளையம் புதூர், அண்ணமார் காலனி, பூலவாரி சுகுமாரன் நகர், சின்னா நகர், கே.வி.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மேம்பாடு மற்றும் புதிய குடியிருப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. 250 புதிய வீடுகள், 800 வீடுகளில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட் டுள்ளன. கட்டுமான பொருட் களின் விலை உயர்வால் கட்டுமான பணி பாதிக்கக்கூடாது என்பதற்காக, இவ்வீடுகள் கட்டுவதற்கு 200 ரூபாய் மதிப்பில் சிமென்ட் மூட்டைகள் அளிக்கப் படுகின்றன.இத்திட்டத்தின் துவக்கத்தில், புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் வீடுகளை பராமரித்து புதுப்பித்து கட்ட மக்கள் மத்தியில் போதிய ஆர்வம் இல்லை; நான்கு தவணைகளில் நிதி வழங்கப்பட்டாலும், சொந்த பணத்தை செலவழித்து கட்டுமான செலவை முடித்துவிட்டு, ஆதாரமாக புகைப்படங் களை சமர்ப்பித்த பிறகே நிதி வழங்கப்படுகிறது. இதனால் சொந்த பணத்தை செலவிட பயனாளிகள் தயக்கம் காட்டினர்.தற்போது, அந்நிலை மாறி மாநகராட்சி தரும் நிதியுடன், வீடுகளை கட்டிக் கொள்ளும் பயனாளிகளும் ஒரு தொகையை செலவிட முன் வருவதால் புதிய குடியிருப்புகள் மற்றும் குடிசை குடியிருப்புகளை மேம் படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டு பணிகள் வேகமாக நடக்கின்றன.

இத்திட்டத்தின் கீழ் கட்டப் படும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு இலவசமாக செய்து தருவதால், கட்டுமான பணியை துரிதமாக முடிப்பதில் பயனாளிகள் தீவிரம் காட்டுகின்றனர்.சில பகுதிகளில் பயனாளிகள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், அப்பணியில் மெத்தனம் நீடிக்கிறது. மேலும், கட்டுமான பணியை பயனாளிகளே சொந்த பொறுப்பில் மேற்கொள்ள வேண்டும். இதற் கும் பயனாளிகளில் ஒரு தரப்பினர் போதிய ஆர்வம் காட்டாததால் கட்டுமான பணி முடியாமல் தேக்கம் ஏற்படுகிறது. சிலபகுதிகளில் பணிகள் முடியாமல் நீடிக்கிறது.இதுவரை, 250 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 800 வீடுகளில் பராமத்து பணி செய்து புதுப்பிக் கப்பட்டு உள்ளன. 400 வீடுகளில் கட்டுமான பணி நடந்து வருகின்றன; அடுத்தகட்டமாக 800 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடுசெய்யப்பட உள்ளது.