Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் மண்ணில் புதைந்த 48 வீடுகளை இடித்து தள்ள உத்தரவு அமைச்சர் சுப.தங்கவேலன் தகவல்

Print PDF

தினகரன்                   25.11.2010

கோவையில் மண்ணில் புதைந்த 48 வீடுகளை இடித்து தள்ள உத்தரவு அமைச்சர் சுப.தங்கவேலன் தகவல்

கோவை, நவ. 25: கோவை அம்மன்குளத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், 1608 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், இடபற்றாக்குறை யால், 16 பிளாக்குகளில், 936 வீடுகள் கட்டும் பணி துவங்கியது. 3 ஆண்டுகளில், 31 கோடி ரூபாய் செலவில் பணி முடிக்க திட்டமிடப்பட்டது. 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், ஏஏ என்ற 48 வீடுகளுக்கான பிளாக் மண்ணில் சாய்ந்த நிலையில் புதைந்தது. 4 அடு க்கு கொண்ட இந்த பிளாக் கின் கட்டுமான தன் மை, அஸ்திவார மண் ஆய்வு செய் யப்பட்டது. அபாய நிலையில் இருப்பதாக கூறி கட்டடத் தின் பக்கவாட்டு சுவர்களை இடித்தனர். இந்நிலையில், ஏஏ பிளாக் அருகேயுள்ள பிபி என்ற 48 வீடு கொண்ட மற்றொரு பிளாக் மைய பகுதி யில் இரண்டாக விரிசல் விட்டு பிளந்தது. இதைதொடர்ந்து மொத்த கட்டுமான பணியும் நிறுத்தப்பட்டது.

இந்த வீடுகளின் நிலை குறித்த தமிழக குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப.தங்கவேலன் நேற்று ஆய்வு நடத்தினர். பாதி இடிக்கப்பட்ட வீடுகள், விரிசல் விட்ட நிலையில் காணப்பட்ட வீடுகளை பார்வையிட்டார். பிபி பிளாக்கின் மைய சுவர், 17 செ.மீ அளவிற்கு விரிசல் விட்டு காணப்பட்டது. இதை அமைச்சர் பார்வையிட்டபோது, குடிசைவாசிகள் முற்றுகையிட்டனர். மண் ணில் புதையும் வீடுகளில் எப்படி நாங்கள் வாழ முடி யும். இங்கே எங்களுக்கு வீடு கள் வேண்டாம், வீடு கொடுத் தால் நாங்கள் குடியிருக்க மாட் டோம். தரமாக வீடு கட்டா மல், புதை மண் பூமியில் ஏன் வீடு கட்டுகிறீர்கள் என கேட்டனர். அதற்கு அமைச் சர் வீடுகளை தரமாக கட்டி ஒப்படைக்கிறோம் என தெரிவித்தார்.

இதைதொடர்ந்து அமைச் சர் சுப.தங்கவேலன், உக்கடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் 2232 வீடுகளை பார்வையிட்டார். விரைவில் உக்கடத்தில் 9600 வீடுகள் கட்டப்படவுள்ளது.

முன்னதாக அமைச்சர் சுப.தங்கவேலன் நிருபர்களி டம் கூறியதாவது:

தமிழகத்தில் 1.06 லட்சம் குடிசை மாற்று வாரிய வீடு கள் இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் 45 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டது. அம் மன் குளத்தில், பாதி இடித்த நிலையில் விடப்பட்ட 48 வீடுகளை முற்றிலும் இடிக்க முடிவு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இனி வீடு கட்டப்படமாட்டாது. இதற்கு பதிலாக உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத் தில் 48 வீடுகள் கட்டப்படும். இதற்கான தொகையை, ஏற் கனவே வீடு கட்டிய ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து பிடித்தம் செய்து விட்டோம். விரைவில் வீடு கட்டும் பணி நடத்தப்படும். சாய்ந்த கட்ட டம் தொடர்பான மண், கட்டட தன்மை குறித்து ஐ..டி தொழில் நுட்ப குழு ஆய்வு நடத்தி வருகிறது. ஒரு வாரத்தில் முடிவு கிடைத்து விடும். அதற்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்ட பணியை நடத்த முடிவு செய்திருக்கிறோம். சாய்ந்த நிலையில், ஒரு பிளாக் கில் உள்ள கட்டடத்தின் அஸ்திவாரத்தை பலப்படுத் தும் பணி நடக்கிறது. ஒரு மூட்டை சிமெண்ட்டில் 100 லிட்டர் தண்ணீர் கலந்து அதனை அழுத்த முறையில் செலுத்தி பலப்படுத்தி வருகி றோம். இந்த பிளாக்கில் 240 டன் எடை கொண்ட மணல் மூட்டைகளை குவித்து தாங்கு திறனை பரிசோதித்து விட் டோம். ஒரு மாதம் இந்த எடை இருந்தும் கட்டடம் சிறிது கூட சாய வில்லை. மற்ற கட்டடங்கள் நன்றாக இருக்கிறது. இதில் மக்கள் குடியேறி வசிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தமிழக ஊரக தொழில்துறை அமைச் சர் பொங்கலூர் பழனிசாமி, மேயர் வெங்கடாசலம், குடி சை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் ராமலிங்கம், துணை மேயர் கார்த்திக், மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, செயற்பொறியாளர்கள் சுகு மார், லட்சுமணன், உதவி பொறியாளர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.