Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உடன்குடி பேரூராட்சிக்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு

Print PDF

தினகரன் 30.11.2010

உடன்குடி பேரூராட்சிக்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு

உடன்குடி, நவ. 30: உடன்குடி பேரூராட்சி தலைவர் சாகுல்ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உடன்குடி பேரூராட்சியில் குடிநீர் மற்றும் சாலைப்பணிகள் மேற்கொள்வதற்காக அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ரூ. 8 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த நிதி மூலம் புதுமனை பகுதியில் சீரான குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டவும், மீதமுள்ள ரூ.3 லட்சத்துடன் பொதுநிதியும் சேர்த்து ரூ. 3.75 லட்சத்தில் கிறிஸ்தியாநகரம் வடக்கு தெருவில் சிமென்ட் சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.