Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ. 9.80 லட்சம் மகப்பேறு நிதியுதவி

Print PDF

தினமணி       09.12.2010

ரூ. 9.80 லட்சம் மகப்பேறு நிதியுதவி

துறையூர், டிச. 8: துறையூர் நகராட்சி அலுவலகத்தில் 161 பேருக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ. 9.80 லட்சம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் பூபதி செல்லதுரை தலைமை வகித்தார். துணைத் தலைவர் க. மகாராஜன், துறையூர் ஒன்றிய திமுக செயலர் மு. வாசுதேவன், ஆணையர் (பொ) ஜி. ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் பி. குமார், சுகாதார ஆய்வாளர் கே. குமார், அலுவலகக் கணக்கர் ரத்தினப்பா ஆகியோர் முன்னிலை வகித்தார்.திமுக தலைமைப் பொதுக் குழு உறுப்பினர் ந. குணசீலன், 161 பேருக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ. 9.80 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.