Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பெண்கள் பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம்

Print PDF

தினகரன்                10.12.2010

மாநகராட்சி பெண்கள் பள்ளிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரம்

மதுரை, டிச.10: மதுரை மாநகராட்சி 5 பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தனியார் அறக்கட்டளை மூலம் ஒரு ரூபாய் நாப்கின் இயந்திரம் விரைவில் வைக்கப்படவுள்ளதாக ஆணையாளர் செபாஸ்டின் கூறினார்.

அவர் தெரிவித்ததாவது: மதுரையில், ஈவே.ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கஸ்தூரி பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 5 மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவிகளுக்கான நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட உள்ளது.

இயந்திரத்தில் மாணவிகள் ஒரு ரூபாய் செலுத்தி நாப்கினை பெற்றுக்கொள்ளலாம். தமிழகத்திலேயே முதல்கட்டமாக மதுரை மாநகராட்சியில் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை பராமரிப்பு செய்ய ஊனமுற்றோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.