Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரிடர் காலத்தில் பயன்படுத்தும் நவீன "விளக்கு பலூன்' அறிமுகம்

Print PDF

தின மணி          17.02.2013

பேரிடர் காலத்தில் பயன்படுத்தும் நவீன "விளக்கு பலூன்' அறிமுகம்

பேரிடர் காலங்களில் இருள் சூழ்ந்த இடத்தில் பயன்படுத்தும் வகையிலான நவீன விளக்கு பலூன்(லைட் பலூன்) காரைக்காலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பேரிடர் காலங்களில் இருள் சூழ்ந்த இடத்திலும், குறிப்பாக, மின்விநியோகம் இல்லாத அனைத்துப் பகுதிகளிலும் வெளிச்சம் தரும் விதமாக, அஸ்கா என்ற பெயருடைய லைட் பலூனை புதுதில்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதை புதுச்சேரி அரசு கொள்முதல் செய்து, காரைக்கால் மாவட்டத்தில் தீயணைப்புத் துறைக்கு 2, காரைக்கால் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 2 என மொத்தம் 4 விளக்கு பலூன்கள் காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் ஜெ. அசோக்குமார், சார்பு ஆட்சியர் அ. முத்தம்மா, உதவி ஆட்சியர் சந்தீப்குமார்சிங் உள்ளிட்டோருக்கு காரைக்கால், சுரக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சுரேஷ், கலியமூர்த்தி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் லைட் பலூனின் பயன்பாடு, செயல்பாடு குறித்து விளக்கினர்.

இதுகுறித்துத் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், 18 அடி உயரத்தில், ஒன்றரை அடி அகலத்தில் உலோகம், பாலித்தீன் முறையில் தயாரிக்கப்பட்டது. 8 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கில் ஆயில் கலந்த பெட்ரோல் சேர்த்து இயங்கச் செய்ய வேண்டும் என்றனர்.

Last Updated on Monday, 18 February 2013 08:43