Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீடு கட்டுவதற்கு உதவித்தொகை: காங்கயம் நகராட்சி முடிவு

Print PDF
தினமணி           08.03.2013

வீடு கட்டுவதற்கு உதவித்தொகை:  காங்கயம் நகராட்சி முடிவு


காங்கயம் நகராட்சிப் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வீடு கட்டுவதற்கு மானிய உதவித்தொகை அளிக்கப்படும் என காங்கயம் நகராட்சித் தலைவர் தெரிவித்தார்.

காங்கயம் நகராட்சியின் சாதாரணக் கூட்டம் நகராட்சி கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவர் ஜி.மணிமாறன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் எம்.தமிழரசு முன்னிலை வகித்தார் . கூட்டத்தில் நகராட்சித் தலைவர் பேசியது:

நகராட்சிப் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் நகர்ப்புற குடிசை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் குளியலறை, கழிப்பறை உள்பட 270 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மானியத்தில் 100 வீடுகள் கட்டித் தர அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, வீடு கட்டுபவர்கள் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு, கூடுதல் விபரங்களைப் பெறலாம் என்றார்.

முதல்வருக்கு நன்றி: காங்கயம் நகராட்சிக்கு புதிதாக மேலாளர், நகராட்சி பொறியாளர், பணி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், திட்ட ஆய்வாளர் ஆகிய 5 பணியிடங்களை உருவாக்கித் தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து, நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.