Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கிழக்கு தில்லி மாநகராட்சியில் இலவச உதவி தொலைபேசி சேவை

Print PDF
தினமணி           08.03.2013

கிழக்கு தில்லி மாநகராட்சியில் இலவச உதவி தொலைபேசி சேவை


கிழக்கு தில்லி மாநகராட்சியில் புகார்களை எளிதில் தெரிவிக்கும் வகையில் இலவச உதவி தொலைபேசி சேவையை மாநகராட்சி மேயர் அன்னபூர்ணா மிஸ்ரா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக கிழக்கு தில்லி மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாநகராட்சி சேவைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கவும், மாநகராட்சியின் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் இலவச உதவி தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.  இந்த தொலைபேசி எண் 155303.

இந்த சேவைக்கான அலுவலகம் கிழக்கு தில்லி மாநகராட்சித் தலைமை அலுவலகமான உத்யோக் சதனில் செயல்படும். இந்த தொலைபேசி எண்ணில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

இந்த சேவையை விரைவில் 24 மணி நேரமும் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அளிக்கப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படும்.

குப்பைகள் அள்ள 30 புதிய லாரிகள்: கிழக்கு தில்லி மாநகராட்சியை மேலும் தூய்மையாக வைக்க,குப்பைகளை அள்ள 30 புதிய லாரிகளின் சேவையை அன்னப்பூர்ணா மிஸ்ரா கர்கர்டோமாவில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ""குப்பைகள் அள்ளப்பட்டு, காஜிப்பூருக்கு எடுத்து செல்ல இந்த லாரிகள் பயன்படுத்தப்படும்'' என்றார்.