Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மார்ச் 11-ல் திருச்சி மாநகராட்சி பட்ஜெட்!

Print PDF
தினமணி          09.03.2013

மார்ச் 11-ல் திருச்சி மாநகராட்சி பட்ஜெட்!

திருச்சி மாநகராட்சியின் 2013-14-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை, மார்ச் 11-ம் தேதி நடைபெறும் மாமன்றத்தின் அவசரக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேயர் அ. ஜெயா தலைமை வகிக்கிறார். ஆணையர் வே.ப. தண்டபாணி, துணை மேயர் ம. ஆசிக் மீரா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநகராட்சி வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவர் வி. அய்யப்பன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கிறார்.

2011-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சி மாமன்றத்தை அதிமுக கைப்பற்றிய பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது நிதிநிலை அறிக்கை இது.

மக்கள் தொகைப் பெருக்கத்துக்கேற்ப விரிவடைந்து வரும் திருச்சி மாநகருக்கான ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க முக்கிய பணிகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கின்றன. இந்த நிதிநிலை அறிக்கையில் இவை இடம்பெறலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறைகேட்பு கூட்டம் ரத்து

திருச்சி மாநகராட்சியில் வரும் மார்ச் 11-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளதால், வழக்கமாக திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டம் அன்று நடைபெறாது என மேயர்  அ. ஜெயா அறிவித்துள்ளார். அடுத்த வாரம் (மார்ச் 18) முதல் வழக்கம்போல, மேயர் தலைமையில் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைகேட்புக் கூட்டங்கள் நடைபெறும்.