Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருத்தங்கலில் ரூ. 3.69 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம்

Print PDF
தினமணி           22.03.2013

திருத்தங்கலில் ரூ. 3.69 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ்நிலையம்


விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் ரூ. 3.69 கோடி மதிப்பீட்டில் பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நகர்மன்றத் தலைவர் ஜி. தனலட்சுமி, துணைத் தலைவர் பி. சக்திவேல் ஆகியோர் கூறினர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: திருத்தங்கல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பஸ் நிலையம் இல்லை என்பது குறையாகவே இருந்து வந்தது. இது குறித்து பொதுமக்கள் அடிக்கடி கோரிக்கை மனு அளித்து வந்தனர்.   

இந்நிலையில் திருத்தங்கல்-விருதுநகர் சாலையில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பஸ் நிலையம் அமைக்க மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகரமைப்புத் துறை இயக்குனர் அனுமதியளித்துள்ளார்.

ரூ. 3.69 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு, அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பரிந்துரையின் பேரில் நகராட்சி நிர்வாக ஆணையாளருக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.