Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூரில் சேவ் மகளிர் மாநாடு: பெண்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் மேயர் ஏ.விசாலாட்சி பேச்சு

Print PDF
தினத்தந்தி        05.04.2013

திருப்பூரில் சேவ் மகளிர் மாநாடு: பெண்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் மேயர் ஏ.விசாலாட்சி பேச்சு


திருப்பூரில் சேவ் அமைப்பு சார்பில் நடந்த மகளிர் மாநாட்டில் பெண்கள் வணங்கப்பட வேண்டியவர்கள் என்று மேயர் ஏ.விசாலாட்சி பேசினார்.

மேயர் ஏ.விசாலாட்சி

திருப்பூர் சேவ் அமைப்பு, வட்டார மகளிர் கூட்டமைப்பு சார்பில் “தொழில்வளம் பெருக்குவதில் மகளிரின் பங்கு“என்ற தலைப்பில் மக ளிர் மாநாடு திருப்பூர் வேலா யுதசாமி கல்யாண மண்டபத் தில் நேற்று நடந்தது.மாநாட் டுக்கு சேவ் இயக்குனர் அலோ சியஸ் தலைமை தாங்கினார். மகளிர் குழு நிர்வாகி ரோஸ் லின் தங்கம் வரவேற்று பேசி னார்.

இந்த மாநாட்டில் திருப்பூர் மேயர் ஏ.விசாலாட்சி சிறப் புரையாற்றினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியத்துவம் அளித்து வருகிற தமிழக முதல்-அமைச் சர் ஜெயலலிதாவுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

முற்காலத்தில் பெண்களின் தலைமையில் தான் இந்த சமூகம் இயங்கியது.அன்றைய பெண்களுக்கு நீர்நிலைகளில் நீந்த தெரியும்.உயர்ந்த மரங்களில் ஏற தெரி யும். வேட்டையாட தெரி யும். போராட தெரியும்.இப்படி அவர்கள் ஆதிகாலத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந் தார்கள்.பின்னர் பெண்களின் சக்தி குறைந்தது.

வணங்கப்பட வேண்டியவர்கள்

இப்போது மீண்டும் பெண் களின் தலைமை தலை தூக்க தொடங்கி உள்ளது.இன்றைய பெண்கள் ஆண்களுக்கு சமமாக அத்தனை வேலை களையும் செய்கிறார்கள். பல் வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார் கள். கல்வி, வேலைவாய்ப்புகள், சுய தொழில்,அரசியல், பொரு ளாதாரம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் முன் னேறி உள்ளனர்.

தோட்டத்து வண்டுகளாக மட்டும் இல்லாமல் துப்பாக்கி குண்டுகளாகவும் இருப்போம் என்று கூறுமளவுக்கு பெண் கள் மேம்பாடு அடைந்துள் ளார்கள்.2 இடங்களில் தான் கருவறை அமைந்துள்ளது. ஒன்று நாம் வணங்கும் ஆண்டவன் உள்ள கோவில் கருவறை. இன்னொன்று தாய் மார்களாகிய பெண்களிடத் தில் உள்ள கருவறை.ஆகவே பெண்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். வாழ்த் தப்பட வேண்டியவர்கள். சமு தாயம் இன்று பெண்களாகிய நம்மை வணங்கவும் வாழ்த்த வும் தயாராக இருக்கிறது. இவ்வாறு மேயர் ஏ.விசாலாட்சி பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த மாநாட்டில் கூட் டமைப்பு பொறுப்பாளர் கவிதா, மாவட்ட சமூக நல அலுவலர் நாகபிரபா, இணைப்பதிவாளர் ராமகிருஷ் ணன், நபார்டு பொது மேலா ளர் ஸ்ரீராம், கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் தியாகராஜன், முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால், குப்புசாமி தனலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.