Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பயணியர் நிழற்குடை திறப்பு

Print PDF
தினமணி        25.04.2013

பயணியர் நிழற்குடை திறப்பு

சிவகங்கை நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பில் 5 பேருந்து நிறுத்த பயணியர் நிழற்குடை செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நகராட்சி பொது நிதியிலிருந்து சோதனை அடிப்படையில் கோர்ட் வாசல், திருப்பத்தூர் சாலை, மானாமதுரை சாலை, இளையான்குடி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தலா ரூ.2 லட்சம் மதிப்பில் புதிதாகப் பேருந்து நிறுத்தப் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிழற்குடைகளை நகர்மன்றத் தலைவர் எம். அர்ச்சுனன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் (பொ) எஸ். வரதராஜன், நகராட்சிப் பணி மேற்பார்வையாளர் பி. சுரேஷ்பாபு, நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிழற்குடைகளின் செயல்பாடுகள் சிறப்பைப் பொருத்து நகரின் பிற பகுதிகளிலும் நிழற்குடை அமைக்கப்படும் என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தார்.