தினமணி 08.05.2013
அடுக்குமாடி குடியிருப்புக்கான அடிக்கல்
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் இலுப்பூரில் கட்டப்பட உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
ரூ.4 கோடி மதிப்பீட்டில், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 112 வீடுகளைக் கொண்ட இந்த குடியிருப்பில், 393 சதுர அடி அளவில் வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்த குடியிருப்பில் வீடு பெற தகுதியுள்ள பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வீடுகள் வழங்கப்படும். மாதம் ரூ.250 வீதம் 20 ஆண்டுகள் செலுத்தி வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சின்னத்தம்பி, பேரூராட்சித் தலைவர் குரு. ராஜமன்னார், வட்டாட்சியர் வேணுகோபால், செயற்பொறியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அடுக்குமாடி குடியிருப்புக்கான அடிக்கல்
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் இலுப்பூரில் கட்டப்பட உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
ரூ.4 கோடி மதிப்பீட்டில், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் 112 வீடுகளைக் கொண்ட இந்த குடியிருப்பில், 393 சதுர அடி அளவில் வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்த குடியிருப்பில் வீடு பெற தகுதியுள்ள பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வீடுகள் வழங்கப்படும். மாதம் ரூ.250 வீதம் 20 ஆண்டுகள் செலுத்தி வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சின்னத்தம்பி, பேரூராட்சித் தலைவர் குரு. ராஜமன்னார், வட்டாட்சியர் வேணுகோபால், செயற்பொறியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.