Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்களுக்கான சலுகை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு

Print PDF

தினமணி               14.06.2013

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்களுக்கான சலுகை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளர்களுக்கான சலுகைகள் மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகை ஜூன் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை இருக்கும்.

மாதாந்திர தவணைக் கடன் செலுத்த தவறியதற்கான அபராத வட்டி தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி தள்ளுபடி, நிலத்தின் இறுதி மதிப்பீடு வேறுபாட்டின் பேரிலான வட்டியில் ஒவ்வோர் ஆண்டிற்கும் 5 மாத கால வட்டி தள்ளுபடி, அரசாணை (நிலை) எண். 174 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 7.2.1991-ல் வழங்கப்பட்டுள்ள பலன்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான ஒதுக்கீடு விலையில் தற்போது நடைமுறையில் உள்ள 10 சதவிகித முன்வைப்புத் தொகைக்கு மட்டும் வட்டி வசூல் போன்றவற்றை சலுகையாகப் பெறலாம்.

இந்தச் சலுகைகளை, ஒதுக்கீடுதாரர்கள் தாம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை இந்த ஆணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து அதாவது மே 31-ஆம் தேதி முதல் ஆறு மாத காலத்திற்குள் ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு நடைமுறையில் உள்ள தனிவட்டியுடன் மூன்று தவணைகளாகவோ செலுத்துவதற்கு விருப்புரிமை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் கோவை வீட்டு வசதி பிரிவில் நிலத்தினை விலை இறுதியாக்கம் செய்யப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்கள் இச்சலுகையைப் பயன்படுத்தி அரசாணையின்படி கணக்கிடப்பட்டுத் தெரிவிக்கும் நிலுவைத் தொகையைச் செலுத்தி கிரயப் பத்திரம் பெறலாம் என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.