Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில், குடிசை மாற்று வாரியம் சார்பில் 19 இடங்களில் ரூ.480 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் 2 இடங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது

Print PDF

தினத்தந்தி               15.06.2013

கோவையில், குடிசை மாற்று வாரியம் சார்பில் 19 இடங்களில் ரூ.480 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் 2 இடங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது

கோவையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 19 இடங்களில் ரூ.480 கோடி செலவில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. முதல் கட்டமாக தற்போது 2 இடங்களில் பணி நடக்கிறது.

கோவையில் 19 இடங்களில் ரூ.480 கோடி செலவில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படுகிறது. இதில் 2 இடங்களில் வீடுகள் கட்டும் பணி தொடங்கியது.

கோவை மாநகராட்சி பகுதியில், ஆட்சேபனை புறம்போக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கீடு செய்து, குடிசையில்லா கோவையை உருவாக்கும் நோக்கில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

ரூ.480 கோடி

குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவையில் முதல் கட்டமாக சுண்டக்காமுத்தூர் மலைநகரில் ரூ.10.9 கோடி செலவில் 4 பிளாக் கட்டிடங்களில் 224 வீடுகளும், மதுக்கரை அண்ணாநகரில் ரூ. 40.77 கோடி செலவில் 232 வீடுகளும், மதுக்கரை எம்.ஜி.ஆர் நகரில் ரூ.24.98 கோடி செலவில் 512 வீடுகளும், கீரணத்தம் காந்திநகரில் ரூ.62 கோடி செலவில் 1880 வீடுகளும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதில் தற்போது மலைநகர், அண்ணாநகர் பகுதிகளில் வீடுகள் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து 2–ம் கட்டமாக இன்னும் 15 இடங்களில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான மொத்த செலவு ரூ.480 கோடி ஆகும்.

கட்டுமான பணிகள் விறுவிறுப்பு

மதுக்கரை அண்ணாநகர், மலை நகர் பகுதிகளில் வீடுகள் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற 2 பகுதிகளில் இன்னும் சில வாரங்களில் பணி தொடங்க உள்ளது. இது தவிர 15 இடங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகிறது. இதற்காக மாநகராட்சி, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் நிலம் ஒதுக்கீடு பெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த இடங்கள் கிடைத்ததும் அதில் விரைவாக பணிகள் தொடங்கும்.

ஜனவரியில் பணி முடியும்

இந்த வீடுகள் அனைத்தும் கோவை மாநகர பகுதியில் புறம்போக்கு பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இந்த வீடுகள் தொடக்க காலத்தில் ஒரு வீடு 120 சதுர அடி பரப்பளவில் தான் கட்டப்பட்டது. தற்போது ஒரு பெட்ரூம், ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு பாத்ரூம் என்ற வகையில் 400 சதுரஅடி பரப்பளவில் விரிவுப்படுத்தி கட்டப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்படும் வீடு, இடநெருக்கடி இல்லாமல் வசிக்க ஏதுவாகும். இந்த கட்டுமான பணிகள் வருகிற 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்து, மார்ச் மாதத்தில் பயனாளிகளுக்கு கிடைத்து விடும் என்று அவர் கூறினார்.