தினமணி 19.06.2013
பெயர்ப் பலகைகள் அகற்றம்
பழங்காநத்தம் பகுதியில் விதிமீறி அமைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை அகற்றச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக செவ்வாய்க்கிழமை புகார் எழுந்தது.
மாநகராட்சி 4 மண்டலங்களிலும் இப்பணி நடந்து வருகிறது. தெற்கு மண்டலப் பகுதிகளில் மாநகராட்சி உதவி ஆணையர் ஆ.தேவதாஸ் தலைமையில் அனுமதியற்ற பெயர்ப் பலகைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
பழங்காநத்தம் பகுதியில் பெயர்ப்பலகைகளை அகற்றும் பணியில் வட்டாட்சியர் கங்காதரன் முன்னிலையில், மாநகராட்சியினர் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனை பலகையை அகற்ற முயன்றபோது, சிலர், அதிகாரிகளை மிரட்டியதுடன், மாநகராட்சி ஜீப் ஓட்டுநர் நவாப் ஜானையும் தாக்கினர். இதுகுறித்து புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் விசாரணை நடத்தினர்.
மாவட்டம் முழுவதும் 938 அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.