Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Print PDF

தினமணி               04.07.2013

தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிதம்பரம் நகர தேரோடும் வீதிகளில் நகராட்சி சார்பில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
  •  சிதம்பரம் நகரில் நான்கு வீதிகளில், சன்னதிகளில் உள்ள நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நடைபாதை ஆக்கிரமிப்பினால் பொதுமக்கள் சாலையில் நடந்துச் செல்வதால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
  •  எனவே போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என டி.எஸ்.பி. ராஜாராம் நகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினார்.
  •  இதையடுத்து நகராட்சி சார்பில் நகர அமைப்பு ஆய்வாளர் அருள்செல்வம், சுகாதார ஆய்வாளர் மோகனரங்கன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை சிதம்பரம் நகரில் மேலரதவீதி, கஞ்சித்தொட்டி, வடக்கு வீதி, கீழரதவீதி, மேலசன்னதி, கீழசன்னதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
  •  நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வீதிகள் விசாலமாக காட்சியளிக்கின்றன.