Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.59 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் :செங்கல்பட்டு நகராட்சி முடிவு

Print PDF

தினமலர்              21.08.2013

ரூ.59 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் :செங்கல்பட்டு நகராட்சி முடிவு

செங்கல்பட்டு : செங்கல்பட்டில், பொதுநிதியின் கீழ், 59 லட்ச ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இங்கு, வேதப்பர் தெரு, மலைப்பூங்கா, சி.என்.மகாதேவன் தெரு, சாஸ்திரி நகர்,பிள்ளையார் கோவில் தெரு, காந்தி சாலை, அண்ண சாலை ஆகிய பகுதியில், கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என,பொதுமக்கள் நகராட்சியிடம் வலியுறுத்தி வந்தனர். கான்கிரீட் சாலைகள் இதையடுத்து, வேதப்பர் தெருவில், 3.25 லட்சம் மதிப்பில், மழைநீர் வடிகால்வாயும், மலைப்பூங்கா பகுதி யில், 8.70 லட்சம் ரூபாய் மதிப்பில், கான்கிரீட் சாலையும், மலைப்பூங்கா மற்றும் சுந்தர விநாயகர் கோவில் ஆகிய பகுதிகளில், 5.73 லட்சம் மதிப்பில், கான்கிரீட் சாலையும், மழைநீர் வடிகால்வாயும் அமைக்கப்பட உள்ளன.

மேலும், சி.என்.மகாதேவன் தெருவில், 7.50 லட்சம் மதிப்பில், மழைநீர் கால்வாய், சாஸ்திரி நகரில், 1.80 லட்சம் மதிப்பில் சிறுபாலம், காமராஜர் தெரு மற்றும் குப்புசாமி தெரு ஆகிய பகுதிகளில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால், சிறுபாலம், கான்கிரீட் சாலை, பிள்ளையார் கோவில் குறுக்கு தெருவில் 2.30 லட்சம் மதிப்பில், கான்கிரீட் சாலை மற்றும் சிறுபாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறுபாலங்கள்

காந்தி சாலையில், 7.95 லட்சம் ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை, நாகாத்தம்மன் கோவில் மற்றும் கங்கையம்மன் கோவில் முதல் தூக்குமரக்குட்டை வரை, 4.10 லட்சம் மதிப்பில் மழைநீர் கால்வாய், அண்ணா சாலையில் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பொதுக்கழிப்பிடம் பராமரிப்பு, நேஷனல் ஸ்டோர் அருகில் 50 ஆயிரம் மதிப்பில் சிறுபாலம் என, மொத்தம் 59.33 லட்சம் ரூபாய் பொது நிதியிலிருந்து மேற்கண்ட பணிகளை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிதியின் கீழ், பாசித் தெரு நகராட்சி பள்ளிக்கு,

8 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச் சுவர் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் கூறும்போது, ""திட்டப்பணிகள் அனைத்தும் 30 நாட்களுக்குள் செய்து முடிக்கப்படும்,'' என்றார்.