Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆட்டோ–கார் முன்பதிவு மையம் மேயர் ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார்

Print PDF

தினத்தந்தி           21.11.2013

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆட்டோ–கார் முன்பதிவு மையம் மேயர் ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் பொருட்டு ஆட்டோ மற்றும் வாடகை கார்களுக்கான முன்பதிவு மையத்தை நேற்று மேயர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.

வாகன நெரிசல்

மதுரை மாட்டுதாவனி பஸ் நிலையத்தில் ஆட்டோ மற்றும் கார்களை ஒழுங்குபடுத்தி பஸ் நிலையத்தில் போக்குவரத்தை சீராக்குவதற்காக மதுரை மாநகராட்சி சார்பில் ஆட்டோ–கார்களின் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டது.

அதை மேயர் ராஜன்செல்லப்பா நேற்று திறந்து வைத்து பேசினார்.

முன்பதிவு மையம்

அப்போது ராஜன்செல்லப்பா கூறியதாவது:–

மாட்டுதாவனியில் பொதுமக்களுக்கு பயன் பெறும் வகையில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் ஆட்டோ–கார் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது முதற்கட்டமாக 90 ஆட்டோக்களும் 25 கார்களும் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து இருக்கின்றனர்.

அரசு கட்டணத்தை முறைபடுத்ததால் அவர்களே குறிப்பிட்ட கட்டணங்களை வசூலிக்கின்றனர். பொதுமக்கள் இந்த ஆட்டோ–கார் முன்பதிவில் பயணிக்கும்போது அந்த குறிப்பிட்ட கார் அல்லது ஆட்டோ நம்பர், டிரைவரின் பெயர் போன்ற முழுத்தகவல்களும் அச்சிட்டுத்தரப்படுகிறது.

இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கமிஷனர் கிரண்குராலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.