தினமலர் 05.12.2013
தார் சாலை பணி
புதுச்சேரி: ஆனந்தரங்க பிள்ளை நகரில் 10 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணிகளை அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார்.தட்டாஞ்சாவடி தொகுதி வினோபா நகர் வார்டுக்கு உட்பட்ட ஆனந்தரங்க பிள்ளை நகரில், தார் சாலை அமைக்க 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. ஆனந்தரங்க பிள்ளை நகரில் நடந்த நிகழ்ச்சியில், அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உழவர்கரை நகராட்சி உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், என்.ஆர்.காங். கட்சி நிர்வாகிள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.