Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெற்கு தில்லி மாநகராட்சி: முன்வரைவு பட்ஜெட் தாக்கல்

Print PDF

தினமணி              10.12.2013

தெற்கு தில்லி மாநகராட்சி: முன்வரைவு  பட்ஜெட் தாக்கல்

தெற்கு தில்லி மாநகராட்சியின் 2013-14-ஆம் ஆண்டுக்கான முன்வரை பட்ஜெட்டை மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

 தெற்கு தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முன்வரைவு பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியது: நிகழ் நிதியாண்டில் ரூ. 2,961 கோடி அளவுக்கு வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், கடந்த 11 மாதங்களில் ரூ. 2,982 கோடி வரி வசூலாகியுள்ளது. வரும் நிதியாண்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாது. வரும் நிதியாண்டில் மாநகராட்சிக்குத் தனி அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, துவாரகா பகுதியில் நிலம் ஒதுக்க தில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

 வரும் நிதியாண்டில் தெற்கு தில்லி மாநகராட்சி ஊழியர்களுக்காக கிரேட்டர் கைலாஷ், தில்லி கேட் - அம்பேத்நகர் விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் குடியிருப்புகள்   கட்டவும், ஏற்கெனவே கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள மாநகராட்சி ஊழியர் குடியிருப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 தெற்கு தில்லி மாநகாட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தெரு விளக்குப் பராமரிப்புப்  பணிகளுக்காக நவீன ஹைட்ராலிக் ஏணி இயந்திரத்தை வாங்கவும், கூடுதலான வாகன மையங்களை அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  தெற்கு தில்லி மாநகாட்சியின் நான்கு மண்டலங்களிலும் பேரிடர் மேலாண்மை மையங்கள், அனைத்து வார்டுகளிலும் கழிவு சுத்திகரிப்பு ஆலை, மாநகராட்சியின் சார்பில் வாடகை சைக்கிள் நிலையங்கள் அமைக்கத் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 மேலும்,மாநகராட்சியில் உள்ள பூங்காக்களை மேம்படுத்தவும், கூடுதல் தோட்டப் பராமரிப்பாளர்களைப் பணியில் அமர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 200 பூங்காக்களில் சேரும் இலைக் குப்பைகளைக் கொண்டு பசுமை மேலாண்மைத் திட்டத்தின் கீழ் உரங்களைத் தயாரித்து, குடியிருப்பு நலச் சங்கங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி தொடக்கக் கல்வி மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் 19 சதவீத நிதி  ஒதுக்கப்படும். புதிதாக 19 பள்ளிகள் தொடங்கப்படும்.

புதிய வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் வாகன நிறுத்த வரியை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, ரூ. 1 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 4 ஆயிரத்தை ரூ. 8 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ரூ. 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு ரூ. 8 ஆயிரமாகவும், ரூ. 10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கு ரூ. 15 ஆயிரமாகவும், ரூ. 20 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள வாகனங்களுக்கு ரூ. 30 ஆயிரமாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் ஆணையர் மணீஷ் குப்தா.