Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் ரூ.10 லட்சத்தில் தெருவிளக்குகள்

Print PDF

தினமலர்                03.01.2014

திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் ரூ.10 லட்சத்தில் தெருவிளக்குகள்

திண்டுக்கல்: பழநி பாதையாத்திரை பக்தர்கள் வசதிக்காக, திண்டுக்கல் நகராட்சியில் உள்ள தெருவிளக்குகளை மாற்றுவதற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகராட்சியில் குள்ளனம்பட்டி-நத்தம் ரோடு, ஆர்.எஸ்., ரோடு, நாகல் நகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வாகனங்கள் செல்கின்றன.

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த ரோடுகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ரோடுகளின் ஓரங்களில் இருந்த 75 தெருவிளக்கு கம்பங்கள் மாற்றிமைக்கப்பட்டன. இதில், 25 மின்கம்பங்களில் 40 வாட்ஸ் குழல் விளக்குகளும், 50 கம்பங்களில் 1.50 வாட்ஸ் சோடியம் விளக்குகளும் எரிந்து வருகின்றன. ரோடுகள் அகலப்படுத்தப்பட்டதால், தெருவிளக்குகளின் வெளிச்சம் போதியளவில் இல்லை.

இதனால், வாகனஓட்டிகளும், பொதுமக்களும் சிரமமடைந்து வருகின்றனர். ஜன.,11ல் தைப்பூச விழா துவங்க உள்ளநிலையில், சிவகங்கை, திருப்புத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, மேலூர், நத்தம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பாதையாத்ரை பக்தர்கள் இந்த வழியாக தான், பழநி கோயில் செல்ல உள்ளனர். இதையடுத்து, தைப்பூச விழாவிற்கு முன்னதாக, தெருவிளக்குகளில் 220 வாட்ஸ் திறனுள்ள மின் சேமிப்பு விளக்குகளை பொருத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த விளக்குகளை வாங்குவதற்காக, ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.