Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குமாரபாளையத்திற்கு ரூ.28 லட்சத்தில் புதிய ரோடு

Print PDF

தினமலர்               06.01.2014

குமாரபாளையத்திற்கு ரூ.28 லட்சத்தில் புதிய ரோடு

அன்னூர் :அன்னூரில் "நபார்டு' திட்டத்தில் ரூ.28 லட்சத்தில் ரோடு போட பூமி பூஜை நடந்தது.
அன்னூர் - சொக்கம் பாளையம் ரோட்டிலுள்ள ஜெ.ஜெ., நகரிலிருந்து, குமாரபாளையம் செல்ல 40 அடி மண் பாதை உள்ளது.

இப்பாதையில் ரோடு போட்டால், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் சொக்கம்பாளையம் செல்லாமலே குமாரபாளையம் போக முடியும். அங்கிருந்து எளிதில் கோவை ரோட்டுக்கும் செல்ல முடியும். இந்த பாதையில் ரோடு போட பல ஆண்டுகளாக கோரி வந்தனர். இந்நிலையில் "நபார்டு' திட்டத்தில், இந்த பாதையில் ரோடு போட அனுமதி அளிக்கப்பட்டது. ரூ. 28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன் தினம் பூமி பூஜையுடன் பணியை பேரூராட்சி தலைவர் ராணி, துணை தலைவர் விஜயகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். செயல் அலுவலர் கல்யாண சுந்தரம், கவுன்சிலர்கள் பூமணி தங்கராஜ், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.