Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையை பசுமையாக்கும் திட்டம்: புதிதாக 224 பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு

Print PDF

மாலை மலர்            08.01.2014

சென்னையை பசுமையாக்கும் திட்டம்: புதிதாக 224 பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு
 
சென்னையை பசுமையாக்கும் திட்டம்: புதிதாக 224 பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி முடிவு

சென்னை, ஜன. 8 - சென்னை நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சாலையோர பூங்காக்கள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடங்கள், குடியிருப்பின் முன்பு மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் பூங்காக்கள் உள்ளன.

தற்போது சென்னை மாநகராட்சி பகுதியில் 486 பூங்காக்கள் உள்ளன. இது மற்ற நகரங்களை விட மிக குறைவு ஆகும்.

டெல்லியில் 15 ஆயிரம் பூங்காக்கள் உள்ளன. மும்பையில் 1,300 பூங்காக்களும், பெங்களூரில் 721, ஐதராபாத்தில் 709 பூங்காக்களும் உள்ளன. ஆனால் சென்னையில் மட்டும் பூங்காக்கள் எண்ணிக்கையில் 486 மட்டுமே உள்ளது. இதை அதிகப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதையடுத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதியில் அதிக எண்ணிக்கையில் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. எந்தெந்த பகுதியில் பூங்காக்கள் அமைக்கலாம் என பூங்காக்கள் பிரிவு ஆய்வு செய்தது. அதன்படி 224 புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது.

இதற்கிடையே சென்னையில் வீடு கட்டும்போது பசுமை திட்டத்தின் கீழ் கூடுதலாக இடைவெளி விட வேண்டும் என்று பெருநகர வளர்ச்சி குழுமம் நிபந்தனை விதித்துள்ளது. அதன் படிதற்போது 0.46 சதுர அடியாக இருக்கும் இடைவெளியை 17 சதுர அடியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

சென்னையில் பூங்காக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்து பராமரிப்பது இல்லை, குடியிருப்பு வாசிகளே இணைந்து சிறந்த முறையில் பராமரிப்பதாக டிரீ கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த குறையை சரி செய்ய பூங்காக்கள் பராமரிப்பு துறைக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், புதிதாக கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

இதே போல் சென்னையில் பெண்களுக்கு தனி விளையாட்டு மைதானங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதலாவதாக கோடம்பாக்கத்தில் இந்த மைதானம் அமைக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 33 கிரவுண்டில் விளையாட்டு மைதானம் உள்ளது.

இதில் 11 கிரவுண்டு நிலத்தில் பெண்களுக்கு பேட் மின்டன் கோர்ட், கைப்பந்து, இறகு பந்து மைதானங்கள் தனியாக அமைக்கப்படுகிறது.

இதற்காக இங்குள்ள ஆண்களுக்கான விளையாட்டு மைதானத்தில் கால் பந்து, கைப்பந்து, கூடைப்பந்து மைதானங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. அருகில் உள்ள பள்ளி மாணவ – மாணவிகளும் பயன்பபடுத்திக் கொள்ளுமாறு உருவாக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மற்ற மைதானங்களிலும் பெண்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட உள்ளது.