Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மாபேட்டையில் ரூ. 49 லட்சத்தில் தார்ச்சாலை பணி

Print PDF

தினமணி           10.01.2014

அம்மாபேட்டையில் ரூ. 49 லட்சத்தில் தார்ச்சாலை பணி

அம்மாபேட்டை பேரூராட்சியில் ரூ. 49 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

நபார்டு திட்டத்தின் கீழ், மூனாஞ்சாவடி முதல் மாரப்பனூர் வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து பேரூராட்சித் தலைவர் டி.செந்தில்குமார் தொடக்கி வைத்தார். ரூ. 49 செலவில் 1.4 கி.மீ. தொலைவுக்கு இச்சாலை அமைக்கப்படுகிறது.

துணைத் தலைவர் சுந்தரராஜன், நிலவள வங்கித் தலைவர் கே.கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் துவக்க நிழச்சியில் கலந்து கொண்டனர்.