Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி            24.01.2014 

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

அகஸ்தீசுவரம் பேரூராட்சிக்குள்பட்ட சரவணந்தேரி மற்றும் சுக்குப்பாறை தேரிவிளையில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ. 3 லட்சம் செலவில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பேரூராட்சித் தலைவர் சந்தையடி எஸ். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஹெலன் டேவிட்சன் எம்.பி. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை திறந்துவைத்தார். இதில், பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன், செயல் அலுவலர் ஆ.செண்பகபாண்டியன், திமுக ஒன்றியச் செயலர் என்.தாமரைபாரதி, வார்டு உறுப்பினர்கள் சிவராமகிருஷ்ணன், சுயம்பையா, வைத்தியநாதன், குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.