தினமணி 24.01.2014
ஆற்காடு நகர குடிசைப் பகுதிகளில் மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு
ஆற்காடு நகராட்சியில் உள்ள குடிசைப் பகுதிகளை மத்திய அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் கீழ் ஹைதராபாதில் உள்ள மண்டல அலுவலக இயக்குநர் பூபதிராவ் உத்தரவின்பேரில் ஆராய்ச்சி அலுவலர்கள் எம்.ராஜசேகர் ரெட்டி, பி.ராஜீவ் ஆகியோர் ஆற்காடு நகராட்சியில் உள்ள 13 அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகள் மற்றும் 13 அறிவிக்கப்படாத குடிசைப் பகுதிகளை கடந்த திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 4 நாள்கள் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் செ.பாரிஜாதம்,நகரமைப்பு அலுவலர் கே.சாந்தி, நகராட்சி சமுதாய அமைப்பாளர் ம. துரை, சமுதாய மேம்பாட்டுச் சங்கத் தலைவர் ம.சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.