Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பல்லாவரம், பம்மல் நகராட்சிகளில் ரூ.143 கோடியில் குடிநீர் திட்ட தொடக்க விழா

Print PDF

தினமணி            24.01.2014   

பல்லாவரம், பம்மல் நகராட்சிகளில் ரூ.143 கோடியில் குடிநீர் திட்ட தொடக்க விழா

பல்லாவரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி. உடன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. தன்சிங் உள்ளிட்டோர்.

பல்லாவரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி. உடன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. தன்சிங் உள்ளிட்டோர்.

சென்னையை அடுத்த பல்லாவரம்,பம்மல் நகராட்சிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.143 கோடி செலவில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டத் தொடக்க விழா பல்லாவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் கீழ்கட்டளையில் நடைபெற்ற பூமிபூஜை விழாவில் பங்கேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியது: பல்லாவரம் நகராட்சியின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் இத்திட்டத்தின் மூலம் தினமும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2.90 கோடி லிட்டர் குடிநீர் பெற்று,விநியோகம் செய்யும் வகையில் ரூ.99.50 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட அனைத்து பழைய குடிநீர்க் குழாய்களையும் அப்புறப்படுத்தி விட்டு,210கி.மீ நீளத்திற்கு புதிய குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவர் 135 லிட்டர் குடிநீர் பெற முடியும் என்றார்.

பின்னர் பம்மல் நகராட்சி சங்கர் நகரில் ரூ.43.10 கோடி செலவில் தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் பெறும் திட்டத்துக்காகக் கட்டவிருக்கும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கான பணியை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா,பல்லாவரம் எம்.எல்.ஏ. பி.தன்சிங்,நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே,குடிநீர் வடிகால் வாரியம் மேலாண் இயக்குநர் சந்திரமோகன், தாமஸ்மலை ஒன்றியத் தலைவர் என்.சி.கிருஷ்ணன்,பல்லாவரம்,பம்மல் நகர்மன்றத் தலைவர்கள் நிசார் அகமது,இளங்கோவன்,துணை தலைவர்கள் டி.ஜெயபிரகாஷ்,அப்பு வெங்கடேசன்,ஆணையர்கள் ராமமூர்த்தி,ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்லாவரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி. உடன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. தன்சிங் உள்ளிட்டோர்.

பல்லாவரம் நகராட்சியில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான பூமி பூஜையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி. உடன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் பி. தன்சிங் உள்ளிட்டோர்.

சென்னையை அடுத்த பல்லாவரம்,பம்மல் நகராட்சிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.143 கோடி செலவில் ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் அபிவிருத்தித் திட்டத் தொடக்க விழா பல்லாவரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் கீழ்கட்டளையில் நடைபெற்ற பூமிபூஜை விழாவில் பங்கேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியது: பல்லாவரம் நகராட்சியின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் இத்திட்டத்தின் மூலம் தினமும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2.90 கோடி லிட்டர் குடிநீர் பெற்று,விநியோகம் செய்யும் வகையில் ரூ.99.50 கோடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட அனைத்து பழைய குடிநீர்க் குழாய்களையும் அப்புறப்படுத்தி விட்டு,210கி.மீ நீளத்திற்கு புதிய குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவர் 135 லிட்டர் குடிநீர் பெற முடியும் என்றார்.

பின்னர் பம்மல் நகராட்சி சங்கர் நகரில் ரூ.43.10 கோடி செலவில் தினமும் 1 கோடி லிட்டர் குடிநீர் பெறும் திட்டத்துக்காகக் கட்டவிருக்கும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிக்கான பணியை அமைச்சர் கே.பி.முனுசாமி தொடங்கி வைத்தார்.

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா,பல்லாவரம் எம்.எல்.ஏ. பி.தன்சிங்,நகராட்சிகள் நிர்வாக ஆணையர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே, குடிநீர் வடிகால் வாரியம் மேலாண் இயக்குநர் சந்திரமோகன், தாமஸ்மலை ஒன்றியத் தலைவர் என்.சி.கிருஷ்ணன், பல்லாவரம்,பம்மல் நகர்மன்றத் தலைவர்கள் நிசார் அகமது, இளங்கோவன், துணை தலைவர்கள் டி.ஜெயபிரகாஷ்,அப்பு வெங்கடேசன்,ஆணையர்கள் ராமமூர்த்தி,ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.