தினமலர் 24.01.2014
துப்புரவு பணிக்கு நவீன லாரிகள்
வேலூர்: துப்புரவு பணிக்கு, 2.50 கோடி ரூபாய் மதிப்பில், நவீன லாரிகள் வாங்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த நகர் புற அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 2012-13 ம் ஆண்டு வேலூர் மாநகராட்சிக்கு, 2.50 கோடி ரூபாய் மதிப்பில் குப்பை லாரிகள், குப்பை தொட்டிகள், உபகரணங்கள் வாங்கப்பட்டது. இவற்றை, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் விழா நேற்று நடந்தது. 170 குப்பை தொட்டிகள், ஆறு லாரிகள், ஆறு மினி ஆட்டோக்கள், மழை நீர் கால்வாயில் உள்ள சகதிகளை அகற்ற, டெய்லரில் ஹெட் லோடார் பொருத்திய டிராக்டர்களை மக்கள் பயன்பாட்டுக்கு, மேயர் கார்த்தியாயினி வழங்கினார். கமிஷனர் ஜானகி, துணை மேயர் தருமலிங்கம், நியமனக் குழு தலைவர் சிவாஜி, கவுன்சிலர்கள் குப்புசாமி, தாமோதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.