தினமணி 25.01.2014
நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு உபகரணங்கள்
வாணியம்பாடி நகராட்சியில் பொதுப் பிரிவில் துப்புரவுப் பணியாளர்களுக்குச் சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் ரவி தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் நீலோபர் கபீல் கலந்துகொண்டு பணியாளர்களுக்கு கையுறை, தலைக்கவசம், சீருடைகள் மற்றும் உபகரணங்களை வழங்கினார் . நிகழ்ச்சியில் மேலாளர் சுரேஷ், துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன், நடராஜன், விஜயகுமார், அலி, அலுவலர்கள் குரு சீனிவாசன், அஜீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.