Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ. 8 கோடி

Print PDF

தினமணி          27.01.2014 

குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ. 8 கோடி

சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகங்களின் சுகாதார பணிகளுக்காக மாநகராட்சியின் நிதி ரூ. 8.36 கோடி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 195 குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகங்கள் உள்ளன.

இவற்றில் 156-க்கு மேற்பட்ட குடியிருப்புகளின் பின்புறம் கான்கிரீட் சாலை அமைத்தல், கழிவுநீர் குழாய்களை பழுதுபார்த்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ. 20 கோடி தேவைப்படும் என்று குடிசை மாற்று வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல்கட்டமாக ரூ.1.87 கோடிக்கான காசோலையை மேயர் மற்றும் ஆணையர் கடந்த 6-ஆம் தேதி வழங்கினர்.

தற்போது மீண்டும் ரூ.8.36 கோடிக்கான காசோலையை மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் குடிசைமாற்று வாரிய தலைமைப் பொறியாளர் ஆர். ஜெயபாலிடம் சனிக்கிழமை வழங்கினர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.