தினமணி 26.01.2014
நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு இலவச எழுது பொருள்கள்
ஆம்பூர் அழகாபுரி நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச எழுது பொருள்கள், சாப்பாடு தட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கிராம கல்விக்குழுத் தலைவர் கே.மணி தலைமை வகித்தார்.
மொஹிப் ஷூ தொழிற்சாலை மேலாளர் ஆதில் அஹமத் கலந்துகொண்டு தொழிற்சாலை சார்பாக 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு எழுது பொருள்கள், சாப்பாடு தட்டுகளை இலவசமாக வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, தொழிற்சாலை பொறியாளர் வெங்கடேசன், ஆசிரியைகள் ஆர்.மதி, ஜி.சிந்தனைமலர், பி.தேவிபாலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.