Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அவிநாசியில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Print PDF

தினமணி          26.01.2014 

அவிநாசியில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

அவிநாசி பேரூராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த 32 நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

  இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அவிநாசி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை பிடிக்கும் பணி நடைபெற்றது.

  இதில் பிடிக்கப்பட்ட 32 நாய்கள், அவிநாசி உரப் பூங்கா வளாகத்தில், புதிதாக அமைப்பட்டுள்ள விலங்குகள் பிறப்பு கட்டுப்படுத்தும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அந் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு, அவிநாசியில் விரைவில் சிறப்பு முகாம் அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ளோர் தங்களது வீட்டு நாய்களை கொண்டு வந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.