தினமணி 30.01.2014
தார் சாலை, மின்விளக்கு திறப்பு விழா
திருவேற்காடு நகராட்சியில் அமைக்கப்பட்ட தார் சாலை மற்றும் மின்விளக்குகளை அமைச்சர் அப்துல் ரஹீம் செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.
திருவேற்காடு நகராட்சிக்குள்பட்ட கோலடி முதல் அயனம்பாக்கம் வரை ரூ.1.64 கோடி செலவில் தார் சாலையும் இதே பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்புடைய மின்விளக்குகளும் நகராட்சி பொது நிதியில் இருந்து புதிதாய் அமைக்கப்பட்டது.
செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற இதன் திறப்பு விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துல் ரஹீம் மின்விளக்கு மற்றும் சாலையை திறந்து வைத்தார்.
இதில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.