Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிவகங்கை நகராட்சியில் ஊருணிகளை இணைப்பது தொடர்பான திட்ட விளக்கக் கூட்டம்

Print PDF

தினமணி             01.02.2014

சிவகங்கை நகராட்சியில் ஊருணிகளை இணைப்பது தொடர்பான திட்ட விளக்கக் கூட்டம்

சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஊருணிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பது தொடர்பான திட்ட விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 சிவகங்கை நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுணன் தலைமை வகித்துப் பேசியதாவது: நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஊருணிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள ஏற்படுத்தும் வகையில் மழைநீர் வடிகால் அமைத்து ஊருணிகளை இணைப்பது குறித்து திட்டம் தயாரிக்க த்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன்படி மாநிலத்தில் 30 நகரங்களில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக கம்பம், திண்டுக்கல், மேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை நகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆதாரங்களை ஒன்றிணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 6.97 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிவகங்கை நகராட்சியில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,403 பேர் உள்ளனர். இங்கு ஆண்டுக்கு 336 மிமீ அளவு மட்டுமே மழை கிடைக்கிறது.

  எனவே கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல் அதனை ஊருணிகளில் சேமிக்கும் வகையில் சிவகங்கையில் 5 கிமீ வரை 7 பிரதான கால்வாய்களும், இதேபோல் 5 கிலோ மீட்டர் வரை 13 துணைக் கால்வாய் உள்பட85 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய்கள் அமைத்து ஊருணிகள் ரூ.38.5கோடி மதிப்பில் இணைக்கும் திட்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஈஜிஸ் இந்தியா நிறுவனம் வரைவு திட்டத்தை தயாரித்துள்ளது.

 திட்டம் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி, அவர்களின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பேரில் 2 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

  கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் வரதராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.