Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ. 7 லட்சத்தில் சூரிய ஒளி மின் விளக்கு

Print PDF

தினமணி             31.01.2014

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் ரூ. 7 லட்சத்தில் சூரிய ஒளி மின் விளக்கு

கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் பொது நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின் விளக்குத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் புதன்கிழமை துவங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, நகராட்சியில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளை அவர் ஆய்வு செய்தார். ராஜகோபாலபுரம், நடு கூடலூர் செல்லும் சாலையில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ள சாலை, கோத்தர்வயல் சாலை, அண்ணாநகர் சாலை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும், காளம்புழா பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள எரிவாயு தகனமேடை வளாகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, அதுகுறித்த விளக்கங்களை கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து மங்குழி, புத்தூர்வயல், தேன்வயல் ஆதிவாசி காலனிக்குச் செல்லும் சாலைகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இறுதியாக தொரப்பள்ளியில் கூடலூர் நகாராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த, தற்போது குப்பைகளைக் கொட்டும் இடத்தைப் பார்வையிட்டு, திட்டத்தை செயல்படுத்த அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது, கூடலூர் நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம், நகராட்சிப் பொறியாளர் டி.சுப்பிரமணி, பணி மேற்பாற்வையாளர் ஜீ.ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.