Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அவல்பூந்துறை பேரூராட்சியில் குடிநீர்த் தொட்டி திறப்பு விழா

Print PDF

தினமணி             31.01.2014

அவல்பூந்துறை பேரூராட்சியில் குடிநீர்த் தொட்டி திறப்பு விழா

அவல்பூந்துறை பேரூராட்சியில் புதன்கிழமை குடிநீர்த் தொட்டி திறப்புவிழா நடைபெற்றது.

அவல்பூந்துறை பேரூராட்சி 6-ஆவது வார்டு, பொங்காளிவலசில் சாக்கடை கட்டும் பணிக்காக பேரூராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 1.65 லட்சம் ஒதுக்கப்பட்டது. இப்பணியை மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.என்.கிட்டுசாமி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் மணி (எ) சிவசுப்பிரமணியம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல, சென்னிமலைப்பாளையத்தில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 4.5 லட்சம் செலவில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இதிலிருந்து குடிநீர் விநியோத்தை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.என்.கிட்டுசாமி துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் கே.சி.ராஜேந்திரன், வார்டு கவுன்சிலர்கள் தினகரன், சண்முகம், அட்டவணை அனுமன்பள்ளி முன்னாள் துணைத் தலைவர் கோவிந்தசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் பொன்னுசாமி, அவல்பூந்துறை டெக்ஸ் தலைவர் பூவைதமிழன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.