Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெருந்துறை பேரூராட்சியில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை

Print PDF

தினமணி             31.01.2014

பெருந்துறை பேரூராட்சியில் நாய்களுக்கு அறுவை சிகிச்சை

பெருந்துறை பேரூராட்சியில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது .

பெருந்துறை பேரூராட்சி பகுதிச் சாலைகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவைகள் சில சாலைகளில் செல்பவர்களைக் கடித்து விடுகின்றன. மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களைத் தொடர்ந்து, குரைத்துக் கொண்டே துரத்திச் செல்கின்றன.

இதில், சிலர் தடுமாறி விழுந்து, காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து, போரூராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பெருந்துறை பேரூராட்சி சார்பில், சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை, சுகாதார பணியாளர்கள் பிடித்து, கால்நடை மருத்துவர்கள் மூலமாக அவைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 20 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

 இக் கூட்டத்திற்கு பின், மேயர் அ.விசாலாட்சி செய்தியாளர்களிடம் கூறியது:

 மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் உள்ள 16 முதல் 30-ஆவது வார்டு வரை,

3-ஆவது மண்டலத்தில் 31 முதல் 45-ஆவது வார்டு வரை என மொத்தம் 30 வார்டுகளில் குப்பை அகற்றும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வீடுகள்தோறும் 600 தள்ளுவண்டிகள் மூலமாக குப்பை சேகரிக்கப்படும். வீதிகளில் குப்பை கொட்டுவதற்கு 800 காம்பேக்டர் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். இத் தொட்டிகளில் ரேடியோ அதிர்வு அடையாள அட்டை பொருத்தப்பட்டு, இணையதளம் மூலமாக கண்காணிக்கப்படும்.

 பேருந்து நிலையம், சந்தை, முக்கியச் சாலைகளில் 24 மணி நேரமும் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படும். இத் தனியார் குப்பை வாகனங்களில் பொது சிறு தொகுதி அலை சேவை கருவி (எடதந) பொருத்தப்பட்டு, அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

குப்பையை அகற்றுவது தொடர்பாக மக்கள் அழைப்பதற்காக இலவச சேவை எண் வழங்கப்படும். ஆன்லைன் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

 தனியார் குப்பை சேகரிக்கும் பணியை வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஞாயிற்றுக்கிழமை (பிப்.2) துவக்கி வைக்க உள்ளார். திருப்பூர் மாநகரை தூய்மையான நகரமாக உருவாக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.