Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

500 கிலோ பிளாஸ்டிக்: பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினமலர்             04.02.2014

500 கிலோ பிளாஸ்டிக்: பொருட்கள் பறிமுதல்

சேலம்: சேலம் நகரில், 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சி கமிஷனர் அசோகன் தலைமையில், மாநகர நல அலுவலர் டாக்டர் அர்ஜூன்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், நான்கு மண்டலங்களில் குகை, அஸ்தம்பட்டி, புது பஸ் ஸ்டாண்டு, பழைய பஸ் ஸ்டாண்டு உள்பட நகரின் பல இடங்களில் சோதனை நடத்தினர். பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், டீ கடைகள் ஆகியவற்றில், 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சுகாதார ஆய்வாளர்கள் மாணிக்கவாசகம், சங்கர், சேகர், சரவணன், சுரேஷ், கந்தசாமி, ரவிச்சந்திரன், மணிகண்டன் உள்பட சோதனையில் ஈடுபட்டனர்.