Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்

Print PDF

தினகரன்            05.02.2014

நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்

மதுரை, : குடிநீர் 4 நாட்களுக்கு ஒரு சுழற்சி முறையில் நாளை வரும் பகுதிகளை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதிகாலை 3.30 முதல் நள்ளிரவு 12.30 வரை நேரங்கள் பிரிக்கப்பட்டு சப்ளை செய்யப்படுவதால் குடத்துடன் காத்து கிடக்கும் பெண்கள் தூக்கம் போச்சு என்ற நிலை உருவாகி உள்ளது.

பிப்ரவரி 6ந் தேதி (நாளை) முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை நகரின் வடகரை, தென் கரை என பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு கரையிலும் 4 பகுதிகள் பிரிக்கப்பட்டு தலா ஒரு நாள் வீதம் சுழற்சி முறையில் சப்ளையாகும். அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 12.30 மணி வரை சப்ளை நேரங்களும் பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி நாளை சப்ளையாகும் பகுதிகள்:- வடகரையில் அதிகாலை 3.30 முதல் 6.30 வரை- அருள்தாஸ்புரம் மேல்நிலைத் தொட்டி கிழக்கு பகுதிகள் அருள்தாஸ்புரம், அசோக்நகர், தத்தநேரி கிழக்கு மெயின்ரோடு, வயல் வெளிபகுதிகள், பெரியசாமி கோனார் தெரு.

காலை 6.30 முதல் மதியம் 2.30 வரை;- ரிசர்லைன் மேல்நிலைத் தொட்டி- ராஜாஜி தெரு, காமராஜர் தெரு, மூவேந்தர் தெரு, பகிர்மான பகுதிகள் பீபிகுளம், அம்பேத்கர் காலனி, முல்லை நகர் தனபால் பள்ளி, புலித்தேவன தெரு, டி.ஆர்.ஓ. காலனி, அண்ணா தெரு, முனியாண்டி கோவில் தெரு.

மதியம் 2.30 முதல் இரவு 8.30 வரை:- தாகூர் வால்பு பகிர்மான பகுதிகள்- பாரதிதாசனார் தெரு, அழகாபுரி, வ.உ.சி.தெரு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1 முதல் 7வது தெரு, பூமி உருண்டை தெரு, அய்யனார் கோவில் 1 முதல் 5வது தெரு, அகிம்சாபுரம், பூந்தமல்லிநகர், ஜீவா தெரு, போஸ் வீதி, 50 அடி, 60 அடி ரோடு, சிவகாமி தெரு, தாகூர்நகர், குலமங்கலம் மெயின்ரோடு.

தென் பகுதியில் இரவு 8.30 முதல் நள்ளிரவு 12.30 வரை- சுந்தர்ராஜபுரம் மேல்நிலைத் தொட்டி விநியோக பகுதிகள் டிவிஎஸ்.நகர், கோவலன்நகர், முத்துப்பட்டி, ஆண்டாள்புரம், பழைய மீனாட்சி மில் காலனி.

அதிகாலை 4 முதல் 7 வரை- கோச்சடை-1, பெத்தானிபுரம், முத்துநகர், பூஞ்சோலைநகர், டோக்நகர், நடராஜ்நகர், இந்திராநகர், கணேசபுரம், முடக்குசாலை, பெத்தானியபுரம், மேட்டுதெரு,  அண்ணா மெயின்வீதி, பல்லவன்நகர், பாண்டியன் நகர், ஐ.என்.டி.யு.சி.காலனி.

காலை 7 முதல் 10.30 வரை- ஞாயிற்றுக் கிழமை சந்தை மேல் நிலைத் தொட்டி- மேமாசி வீதி, கிருஷ்ணராயர் தெப்பம், டி.வி.லேன், மேலபெருமாள் வீதி, காக்கா தோப்பு, குட்செட் தெரு, நாடார் சந்து, அக்ரகாரம் மணி அய்யர் ஸ்காட் ரோடு, மணிநகரம், கனகவேல் காலனி, பேச்சியம்மன் படித்துறை. காலை 10.30 முதல் மதியம் 12 மணி- ஜிஎல்எஸ்ஆர்.

மதியம் 12 முதல் மாலை 6 மணி- பெரியார் பஸ் ஸ்டாண்ட், திடீர்நகர்,  மேலவாசல், பெருமாள் கோவில், கட்ராபாளையம், நேதாஜி ரோடு, காஜிமார் தெரு, பள்ளிக்கூட தெரு, மீனாட்சி தியேட்டர், எப்எப்.ரோடு, மேலமாசி வீதி, தெற்கு ஆவணி மூலவீதி.

மாலை 6 முதல் இரவு 10.30 மணி- விராட்டிபத்து, முத்துதேவர் காலனி, ஜெய்நகர், எச்எம்எஸ்.காலனி, ஆனந்தராஜ்நகர். இருளாண்டி தேவர் காலனி, கிருதுமால்நகர். அங்காள ஈஸ்வரி நகர். இரவு 10.30 முதல் அதிகாலை 3 மணி- ஜிஎல்எஸ்ஆர்.