Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரியகுளம் வழியாக பேரூர்-கோவைபுதூர் இணைப்பு சாலை ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு பணி துவக்கம்

Print PDF

தினகரன்              11.02.2014

பெரியகுளம் வழியாக பேரூர்-கோவைபுதூர் இணைப்பு சாலை ரூ.35 லட்சத்தில் சீரமைப்பு பணி துவக்கம்

தொண்டாமுத்தூர், : கோவை அருகே பேரூர் பாரதிபுரத்தில் இருந்து புட்டுவிக்கி வழியாக கோவைபுதூர் மற்றும் உக்க டம் பகுதிகளை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செ ல்ல முடியாமல் இருந்தது. இதனால் கோவைபுதூர் பகுதியில் இருந்து பேரூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 4 கி.மீ தூரம் சுண்டக்காமுத்தூரை சுற்றி செல்ல வேண்டி இருந்தது. மேலும் இந்த ரோட்டில் இயக்கப்பட்டு வந்த மினி பஸ் நிர்வாகத்தினர் போக்குவரத்தை நிறுத்தி விட்டனர்.

இதுகுறித்து கவுன்சிலர்கள் பேரூர் மயில், புட்டுவிக்கி மணியன் ஆகியோர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து நபார்டு வங்கி உதவி திட்டத்தில் பேரூர்-கோவைபுதூர் மற்றும் உக்கடம் இணைப்பு சாலை ரூ.35 லட்சத்தில் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது.

2 கி.மீ தூரத்திற்கு 3.75 மீட்டர் அகலத்தில் பேரூர் பெரி ய குளத்தின் கரையில் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் துவங்கியது. பணிகளை பேரூராட்சி தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சசிகலா, துணைத்தலைவர் செந்தில்குமார், பேரூராட்சி பொ றியாளர் ராமசாமி மற்றும் கவுன்சிலர்கள் பார்வையி ட்டு விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.