Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி வரி வசூலர்களுக்கு "டேப்லெட்' கணினிகள்

Print PDF

தினமணி             12.02.2014

மாநகராட்சி வரி வசூலர்களுக்கு "டேப்லெட்' கணினிகள்

கோவை மாநகராட்சியில் வரி வசூலர்களுக்கு டேப்லெட் கணினிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

கோவை மாநகராட்சி மைய அலுவலகக் கூட்ட அரங்கில் மேயர் செ.ம.வேலுசாமி டேப்லெட் கணினிகளை வழங்கினார். ஆணையர் க.லதா முன்னிலை வகித்தார். இவற்றை வழங்கி மேயர் செ.ம. வேலுசாமி பேசியது:

÷டேப்லெட் கணினி வழங்கப்பட்டதன்மூலம் விரைவாக மக்களுக்கு சேவை வழங்கப்படும். சொத்துவரி விதிக்கத் தேவையான விவரங்கள் இதில் பதிவு செய்யப்பட்டு, சொத்துவரி கணக்கீடு கணினி மூலம் விரைவாக மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சிப் பகுதியில் விடுபட்ட கட்டடங்கள் மற்றும் உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டடங்களை புகைப்படம் எடுத்து கணினியில் பதிவு செய்து உரிய வரிவிதிப்புக் கணக்கீடு மேற்கொள்ளப்படும்.

÷டேப்லெட் கணினியில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவரங்களைப் பதிவு செய்யத் தேவையான மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. 60 வரி வசூலர்களுக்கும் 5 உதவி வருவாய் அலுவலர்களுக்கும் டேப்லெட் கணினி வழங்கப்படும்.

மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் 2,944 மாதாந்திர வாடகைக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை வாடகை உரிமம் பெற்றுள்ளவர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை மற்றும் வாடகை பாக்கி செலுத்த வேண்டிய விவரங்களை கைபேசி வழியாக தெரிந்துகொள்ளும் வசதியும் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வணிக வளாகக் கடைகளுக்கும் புதிய வாடகை புத்தகம் மற்றும் அந்தந்தக் கடைகளுக்கான விவரங்கள் அடங்கிய உரிம அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் மூலம் கடை வாடகை உரிமம் பெற்றுள்ளவர்கள் உடனுக்குடன் வாடகை நிலுவைகளை ரொக்கமாகவோ, வரைவோலையாகவோ அந்தந்த மண்டலங்களில் செலுத்தலாம் என்று மேயர் செ.ம.வேலுசாமி தெரிவித்தார்.

உதவி ஆணையர்கள் சுந்தரராஜ், செந்தில்குமார், சுப்ரமணியன், சரவணன், அமல்ராஜ், மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.