Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொட்டியம் பேரூராட்சியில் குடிநீர் ஆழ்துளை கிணறு பம்புகள் திறப்பு விழா

Print PDF

தினகரன்              13.02.2014

தொட்டியம் பேரூராட்சியில் குடிநீர் ஆழ்துளை கிணறு பம்புகள் திறப்பு விழா

தொட்டியம் : தொட்டியம் பேரூராட்சியில் பொது நிதியில் அமைக்கப்பட்டுள்ள 25எச்.பி. ஆழ்குழாய் கிணற்றையும், எடத்தெரு, அண்ணாநகர் காலனி, பஜனை மடத்தெரு உள்ளிட்ட தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மினி பவர் பம்புகளையும் முசிறி எம்எல்ஏ  என்.ஆர்.சிவபதி தலைமை வகித்து திறந்து வைத்தார்.

மாவட்ட கவுன்சிலர் ஏலுலீர்பட்டி தங்கவேல்,பேரூராட்சித் தலைவர் தமிழ்செல்வி, செயல்அலுவலர் சித்ரா, துணைத் தலைவர் ஐயப்பன் முன்னிலை வகித்தனர். விழாவில் ஒன்றிய பொருளாளர் திருஞானம், தா.பேட்டை சேர்மன் செல்வராஜ், முசிறி பேரூ. தலைவர் ராஜா, கவுன்சிலர்கள் ரமேஷ், ராஜேஸ்வரி, பொன்னுசாமி, ராஜ்மோகன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் குணா, ரத்தினம், சதாசிவம், வெள்ளுர்ராஜீ, ஊராட்சித் தலைவர் விஸ்வநாதன், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் ராஜா, இயக்குனர் ராஜேந்திரன், அவைத் தலைவர்ராஜா, கிளை நிர்வாகிகள் திருஞானம், மலர் சுப்பிரமணி பேரூராட்சி பணியாளர்கள் சம்பத், ராஜேந்திரன், கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.