Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பொள்ளாச்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் நகராட்சி தலைவர் தலைமையில் பூமிபூஜை

Print PDF

தினத்தந்தி             14.02.2014

பொள்ளாச்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம் நகராட்சி தலைவர் தலைமையில் பூமிபூஜை

பொள்ளாச்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது.

காய்கறி கழிவுகள்

பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36–வது வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் மூலம் மண்புழு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து காய் கறி, பழங்கள், மனித கழிவு களில் இருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி திட்ட மிட்டு உள்ளது. பொள்ளாச்சி யில் உள்ள திரு.வி.க. மார்க் கெட், காந்தி மார்க்கெட், தேர் நிலை மார்க்கெட் ஆகிய 3 பகுதி களில் இருந்தும் தினமும் 5 டன் மக்கும் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது.

இந்த கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு (பயோ கியாஸ்) தயாரிக்க மாட்டு சந்தை அருகே 500 சென்ட் பரப் பளவில் இடம் ஒதுக்கப் பட்டு உள்ளது. இதற் காக ரூ.1 கோடி அரசு மானியம் வழங்கி உள்ளது.

பூமிபூஜை

பொள்ளாச்சி காந்தி மார்க் கெட்டில் காய்கறிகழிவு களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்கு பூமிபூஜை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கமிஷனர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கி பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.

இதில் என்ஜீனியர் ராஜா, கவுன்சிலர்கள் ஜேம்ஸ்ராஜா, வசந்த் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண் டனர்.

மின்சாரம் தயாரிக்க திட்டம்

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

மார்க்கெட்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் காய்கறி, பழக் கழிவுகளை கொண்டு, அதில் இருந்து கார்பன்–டை– ஆக் சைடை பிரித்து எடுக்கப் படுகிறது. அதன்பின்னர் கிடைக்கும் சுத்தமான மீத் தேனை எடுத்து ஜென ரேட்டர் இயக்கப்பட்டு, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படு கிறது. இந்த பணிகளை 3 மாதத்தில் முடிக்க திட்டமிட்டு உள்ளது.

இதேபோன்று மனித கழிவு களில் இருந்து மின்சாரம் தயாரிக்க நகராட்சி மூலம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய் யப்பட்டு உள்ளது. இதற்காக பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகில் இடம் தேர்வு செய் யப்பட்டு உள்ளது. கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மின் சாரம் முழுவதும் நகராட்சி தேவைக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.