தினமணி 16.09.2014
உள்ளாட்சி இடைத் தேர்தல் : வாக்களிக்கத் தேவையான அடையாளச் சான்று
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டு வர வேண்டிய அடையாள ஆவணங்களை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 530 பதவியிடங்களுக்க வரும் வியாழக்கிழமை 18ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி இடைத் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்புகள் வழங்கும் பணி இன்றுடன் முடிவடைகிறது.
இந்த பூத் ஸ்லிப்புகள் இருந்தால், வாக்காளர்கள் வேறு எந்த ஆவணமும் இன்றி வாக்களிக்கலாம். பூத் சிலிப்புகள் இல்லாதபட்சத்தில்
1. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை.
2. பாஸ்போர்ட்
3. வாகன ஓட்டுநர் உரிமம்.
4. மத்திய-மாநில அரசுகள்-பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள அடையாள அட்டைகள்.
5. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படம் ஒட்டப்பட்ட சேமிப்புக் கணக்குப் புத்தகம்.
6. வருமான வரிக் கணக்கு அட்டை (பான் அட்டை)
7. ஆதார் அடையாள அட்டை.
8. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் அட்டை.
9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை.
10. மத்திய தொழிலாளர் நலத் துறை வழங்கியுள்ள சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஸ்மார்ட் கார்டு.
11. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
12. தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழங்கப்படும் வாக்குச்சாவடி சீட்டு.
13. வங்கிக் கணக்குப் புத்தகம்
14. மாற்றுத் திறனாளிகள் துறையால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய மாற்றுத் திறனாளிகள் சான்று.
மேற்கண்ட ஆவணங்களில் வாக்காளரின் புகைப்படம் நிச்சயம் இடம்பெற்றிருக்க வேண்டும். வாக்காளரின் புகைப்படம் இல்லாத எந்த ஆவணமும் அடையாள அட்டையாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.