Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து 1077-ல் 879 புகார்கள்

Print PDF
தினமணி        10.10.2014

குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து 1077-ல் 879 புகார்கள்

குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவிக்க தொடங்கப்பட்ட கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மூலம் இதுவரை 879 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ஜெயசிறி முரளிதரன்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:

மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 1077 என்ற தொலைபேசி எண் கடந்த மே 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு புகார்கள் பெறப்பட்டு வந்தன.

செப்டம்பர் மாதம் 25-ம் தேதி வரை மாநகராட்சிப் பகுதிகளில் 280, நகராட்சிப் பகுதிகளில் 93, பேரூராட்சிகளில் 46, ஊராட்சி ஒன்றியங்களில் 460 என 879 புகார்கள் பெறப்பட்டு, பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டன அனைத்து புகார்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் இந்த தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ராமசாமி உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.