Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விளாப்பாக்கம், தக்கோலம் பேரூராட்சிகளில் புகையில்லா போகி குறித்த ஆலோசனைக் கூட்டம்

Print PDF
தினமணி       09.01.2015

விளாப்பாக்கம், தக்கோலம் பேரூராட்சிகளில் புகையில்லா போகி குறித்த ஆலோசனைக் கூட்டம்

புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் விளாப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் என்.செல்வி ராமசேகர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் யூ.முஹம்மது ரிஜ்வான் முன்னிலை வகித்தார்.

இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், மகாலட்சுமி மகளிர் கல்லூரி, லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை, ஸ்ரீ மாதா புவனேஸ்வரி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், மகளிர் சுயஉதவிக் குழு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

போகி பண்டிகையை புகையில்லாமல் கொண்டாடுவது குறித்தும், புகையால் ஏற்படும் தீமைகள் பற்றியும் கலை நிகழ்ச்சிகள், மனிதச் சங்கிலி, போட்டிகள் நடத்தி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பேரூராட்சிக்கு உள்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளிடமிருந்து உபயோகமற்ற பொருள்களை சேகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தக்கோலத்தில்...

போகியை புகையில்லா திருநாளாகக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தக்கோலம் பேரூராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு செயல் அலுவலர் ரா.சுமா தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சித் தலைவர் எஸ்.நாகராஜன், மன்ற உறுப்பினர்கள் ஷே.முகமது காசிம், ந.சண்முகம், தே.செண்பகவள்ளி, மு.நிர்மலா, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செ.முருகேசன், பேருராட்சி சுகாதார ஆய்வாளர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பொங்கல் நாளை புகையில்லாமல் கொண்டாடுவது குறித்து திட்டமிடப்பட்டது.